இழப்பின் வலி
இழப்பின் வலி
மிகக்கொடியது.
பேரன்பில் திளைத்திடும் மனதை
கூர்முனை வாளால்
கீறுதல் போன்றது..
நேசிக்கும் உறவினை
இழந்திடும் நினைவுகள்
வானவில் நழுவிய நிறமதைப்போல
தனித்தே கரைந்திடும்..
கனவுகளில்கூட
சிரித்திட மறக்கும்
தாய்மையின் இழப்பு..
கணவனில் கூட முழுமைகொள்ளாது
தந்தையின் இழப்பு..
சாகும் வரையில்
வலிகள் கொடுக்கும்
மழலையின் இழப்பு..