இதயம் தொட்ட நினைவு

நிலவை தேடும் இரவைப்போல உன் நினைவைத்தேடி அலைகிறேன்
வருடம் பல கடந்து சென்று வசந்தம் காண முனைகிறேன்
வசந்தகால பூ என்னை உன் பிரிவு வாடிய பூவாய் மாற்றுதே
மறுபடி என்னைச் சேர்வாய் என்ற எண்ணம் என்னை தேற்றுதே

இதயம் தொட்ட நினைவே ..!என் இறுதிவரை நீ வேண்டும்..
இலையுதிர் கால மரம் என்னை துளிர்க்க வைக்க நீ வேண்டும்

எழுதியவர் : ப. அருள்பண்டியன் (23-Dec-19, 8:32 pm)
பார்வை : 807

மேலே