கண்கள் இரண்டிலும் தீபங்களின் ஆராதனை

குவிந்த இதழ்களில்
பளிச்சிடும் முல்லை
கவியும் இமைகளில்
அழகிய அந்தி மாலை
கண்கள் இரண்டிலும்
தீபங்களின் ஆராதனை
நெஞ்சின் ஒவ்வொரு உணர்வும்
எழுதுது உந்தன் கவிதை
அந்தக் கவிதைகள் விரிக்குது
மனதிலோர் ஆனந்த சூழலை !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Dec-19, 7:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே