சிறுநீர்

ிறுநீர்

மார்கழித் திங்களில் கர்பம்

மார்கழித் திங்களும் கர்பவோட்ட திங்களாம்
யாருடைய தென்று வினவுவாய் -- கர்பமும்
கார்கால பீடங்கள் கார்மேக நிர்ணயம்
பாரியற்கை போடும் கணக்கு

மார்கழி திங்களில் இறைவன் மக்களுக்கும் சித்த புருஷர்க்கும் இயற்கைக்கும் நல்வழிகள்
ஏற்படுத்தும் மாதமாகும். மர்கழியில் மக்களின் நன்நீர் தரவேண்டி வருடத்திற் குண்டான
மழைக்காக வானத்தில் பலவாறாக சூலாக்குகிறாம் . ஆகையினால்தான் சான்றொர்கள் இம்மாதத்தை பீட்ட (ம்) மாதமென்றார். அது மறுவிவிட பீடை மாதமென்றார். அதுவும் நன்மைக்கே ! பீடை மாதத்தில் எந்த ஒரு காரியமும் தொடங்கார் மக்களும், அந்த மார்கழித் திங்களை ஆண்டவன் வழிபாட்டிற்கே ஒதுக்கினர் போலும். மனிதர் சித்தனாக வேண்டின் அதற்கான வ்ழிமுரைகளியும் மார்கழி மாதத்திலேயேதான் இறைவன் துவங்கி வைக்கிறார். அதை சித்தர்கள் மறைபொருளாகவே சொல்லியிருக்கிறார்கள். அது சித்திரை வரையிலும் தொடர்கிறது. மறைபொருளை மக்கள் தவறாகவே புரிந்துகொண்டு செயல் படுகிறார்கள்.
பணத்தை எழுதியும் பேசியும் சம்பாதிக்க நினைக்கும் பேராசை பிடித்த எழுத்தாளகளும்
மறை முகப் பொருளை ஆராய்ந்து அறியமுடியாப் பதர்கள் சித்தர்கள் சிறுநீர் குடிக்கச் சொல்கிறார்கள் என்கிறார். ஜெயமோகன் எனுமோர் மனிதன், பேராசை பிடித்த, தனக்கெல்லாம் தெரியும் என்று நினைக்கும் எழுத்தாளன் கேட்பதைப் பாருங்கள். மொரார்ஜி சிறுநீர் குடித்தார் ஆனால் வள்ளுவன் சிறு நீர் குடித்தாரா என்பதில் ஐயமாக இருக்கிறது என்கிறார். இவர் நுனிப்புல் மேயந்து நூறு புத்தகம் எழுதி பணம் சமாதிக்க நினைப்பவர். சித்தர்களைபற்றி எழுத இந்த மனிதனுக்கு ஒரு தகுதியும் கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண் டும். இவருக்குத் தெரிந்த வார்த்தைகள் தாந்த்ரீகம் மாந்த்ரீகம் தான் தயவு செய்து இதை இந்த மனிதருக்கு யாராவது எடுத்துச் சொல்லித் திருத்துங்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (30-Dec-19, 9:33 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : siruneer
பார்வை : 88

மேலே