பகல்திங்கள் யாரிவள்
தென்றல் தெருவினில் பூவாசம் ஏந்திவர
திங்களாய்நீ மெல்ல வரும்காலைப் போதினில்
ஞாயிறும் பார்க்குது பார் !
தென்றல் தெருவினில் பூவாசம் ஏந்திவர
திங்களாய்நீ மெல்ல வரும்காலைப் போதினில்
ஞாயிறும் மெல்லகீழ் வானத்தில் பார்க்கும்
பகல்திங்கள் யாரிவள் என்று !
------முறையே சிந்தியல் இன்னிசை வெண்பாக்கள்