பகல்திங்கள் யாரிவள்

தென்றல் தெருவினில் பூவாசம் ஏந்திவர
திங்களாய்நீ மெல்ல வரும்காலைப் போதினில்
ஞாயிறும் பார்க்குது பார் !


தென்றல் தெருவினில் பூவாசம் ஏந்திவர
திங்களாய்நீ மெல்ல வரும்காலைப் போதினில்
ஞாயிறும் மெல்லகீழ் வானத்தில் பார்க்கும்
பகல்திங்கள் யாரிவள் என்று !

------முறையே சிந்தியல் இன்னிசை வெண்பாக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jan-20, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே