ஆட்டுக்கல் மயங்கி கிடக்கிறது

ஆட்டுக்கல் மயங்கி கிடக்கிறது
உளியின் விளிம்பு
பாறையை தொட்டதும்
பரவசமானது !

இறைவனாய் செதுக்கினால்
பால் பழம் பூஜை
புனஸ்காரங்கள்
கலை சிற்பங்களாய்
செதுக்கினால்
இரசிப்பவர்கள் அறிமுகம்

தன்னை செதுக்கி
முடித்தபின்
உணர்ந்து கொண்டது
ஆட்டுக்கல்லாய் !

தினம் தினம் குழவியிடம்
இடிபட்டாலும் விதம்
விதமாய் ருசி பார்த்து
மயங்கி போய்
கிடந்தது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Jan-20, 10:47 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 119

மேலே