காதல்
வெறும் கருங்கல் பாறையும் உளியும்
இருந்தால் மட்டும் சிலைகள் தோன்றுமா
பண்புள்ள சிற்பி இருந்தால் மட்டுமே
கற்சிலையும் பேசும் வண்ணம் சிற்பங்கள்
படைத்திட முடியும் அதுபோல
ஓர் ஆண் ஓர் பெண் இருவர் இருந்தால் மட்டும்
தோன்றுவதில்லைக் காதல் ......
காதலுக்கு ஒத்த மனமென்னும் அலைகள்
இவ்விருவரையும் மோத வேண்டும் அதில்
உருக்கொண்டு எழுவதே காதல்
கண்ணுக்கு தெரியாது ஆயின்
மனதிற்கு புலனாகும் வினோதம் !