அவள் சென்றுவிட்டாள்

அவளது பிரிவில் இந்த எழுத்துக்களே எனக்கு ஆறுதல் சொல்கின்றன....

அவளது குரலில் ஓசை என் காதில் இசைத்துக் கொண்டிருக்கிறது...

அவளது கொலுசின் சப்தம் என் மனதில் ஆழமாய் இன்னும் இருக்கின்றது...

அவள் கண்கள் ஏனோ என் மனதை நித்தம் கலைக்கின்றது...

அவள் ஒன்றும் பேரழகி அல்ல
ஆனால் எனது தேவதை அவள்!!!

மயிலின் தோகை அவள் கூந்தலுக்கு ஈடாகாது..

அலை ஓசையும் அவள் சிரிப்புக்கு நிகராகாது

எனக்காக இருக்கும் ஒருத்தி அவள் எனும் நம்பிக்கை துளிகளில் ...

நான் கருதுகிறேன்

என் நாட்களை
அவள் நினைவுகளோடு...

எழுதியவர் : (25-Jan-20, 4:27 pm)
சேர்த்தது : rathika
பார்வை : 94

மேலே