பார்வைகள்
என் கண்களை படைத்த அதே
இறைவனா உன் கண்களையும் படைத்தான்
நம்ப முடியலையே அந்த உன் அழகு
கண்களுக்கு அடிமையானேனே நான்
என்று நான் அவளுக்கு சொல்ல , அவள்
'இதைத்தான் ...... உன் விழிகளின்
மோகன புன்னகைக்கு என்னை நீ
அடிமைப்படுத்த.... உன் விழிகளைப்பற்றி
எண்ணினேன் நான் என்றாள்'
ஓ இப்படித்தான் பார்வைகள் மோதுகின்றனவோ
முடிவில் காதல் தர என்று எண்ணி
மகிழ்ந்தோம் நாங்கள்