பிறந்தநாள் வாழ்த்து

உலகமெலாம் உனக்கிருக்க
உயர்வு அங்கு காத்திருக்க
விடியலின் புது ஒளியாக
உன் வாழ்வில் சிறந்திடவே
நன்னீரின் தெளிவுடனே
பன்னீர்தரும் மணம்போல
ஒழுக்கம் நற்குணத்துடனே
இன்றினைப்போல் என்றென்றும்
பல்லாண்டு மகிழ்ந்திருக்க
அழகுதமிழ் சொற்களினால்
புகழ்மாலை கோர்த்தெடுத்து
புவிவந்த திருநாளில்
மனதார வாழ்த்துகிறேன்..

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (1-Feb-20, 10:20 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 1822

மேலே