பெண்

மல்லிகை விரல்கள் மதியின் முகம்
மின்மினிக் கண்கள் கொவ்வைச் செவ்வாய்
மயிற்பீலியென இமைகள் முத்தெனப் பற்கள்
மானென வதனம் பசுவென பொலிவு
கானகத்தின் கலையரசியோ
பாற்கடலின் இல்லத்தரசியோ
விரிந்தெழுந்த வானத்து
ஜோதியின் பிம்பமோ
சிலிர்க்கின்ற காற்றின் மென்தடவலோ
பார்க்கும் கண்களுக்கு விருந்தளிக்கும் யவ்வனப் பொன்சிலையோ

மதியோ மங்கையோ நதியோ நங்கையோ
எழுஸ்வரமோ பெண்ணினமோ பொறுமையின் பொற்கோவிலோ
காரிருளும் கலைந்தோடும் காற்றின் சுழலோ
பார் போற்றும் வேந்தனும் பறை சாற்றும் கற்புக்கரசியோ
பயில்விக்கும் ஆசானும் பணிந்தேத்தும் கலைமகளோ
நீயே ஆள்வது என் இதயமோ
தீயாய் எரிந்தது உன் பிரிவால்
மெய்யென நீ உணர்ந்தால்
சேர்வாய் என்னுடன் உன்மனதால்

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (9-Feb-20, 11:38 pm)
சேர்த்தது : மோகன் ராஜா
பார்வை : 2607

மேலே