80S அப்பாவிகள்

பனைமரத்து நொங்கு மட்டையில்
வாகனம் செய்து பழகினோம்...
நெல் நிலத்தில் பாதம் படாமல் வரப்பினில் ஓடி விளையாடினோம்..
தென்னை குச்சியில் அம்பு செய்து
மன்னர் வேடம் கட்டினோம்..
மரக்கிளையில் ஊஞ்சல் செய்து
எண்ணிக்கையில் ஆடி மகிழ்ந்தோம்
முதுகினில் கையை ஊன்றி
ஆபியம் எனக் கூறி விளையாடினோம்..
கலிமண் பாத்திரத்தில் உணவு செய்து
உண்டதைப் போல் பாவனை செய்தோம்
துளையில்லாத தேன்மிட்டாயில்
தேன் எப்படி வந்ததென்று குழம்பினோம்.
குட்டையில் பிடித்த தவளை குஞ்சுகளை
மீன் குஞ்சுகள் என ஏமார்ந்தோம்..
மூன்று வயது மூத்தவரானாலும்
கைக் கட்டிக் கொண்டு
பதில் கூறினோம்..அப்பாவிகளாக...

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (12-Feb-20, 7:34 pm)
பார்வை : 153

மேலே