ஆவியான்

நேத்து டெல்லில நடந்த முக்கிய நிகழ்ச்சி என்னன்னு சொல்லுங்க பாட்டி.
@@@@@
அதுவா, வந்து ஆமு ஆத்துமிக் கச்சித் தலைவரு கெச்சிரிவாலு மொதலமைச்சரா பதவி ஏத்துகிட்டதை செய்தில காட்டுனாங்க.
@@@@@
சரி அவுரு மாதிரியே ஒரு பொடிப்பையன் ஆடை அணிஞ்சிட்டு தொப்பி போட்டுட்டு வந்தானே அவம் பேரு தெரியுமா?
@@@@@@
எனக்கு எப்பிடிடா பேரா தெரியும். அந்தக் கொழந்தையைப் பல தடவ காட்டுனாங்க. அதும் பேரச் சொல்லுலியே.
@@@@@
இப்பச் சொல்லறன் கேட்டுக்குங்க. செய்தித் தாள்ல அந்த பொடியான படமும் பேரும் அவனப் பத்தின செய்தியும் போட்டிருந்தாங்க.
@@@@@@
அந்தக் கொழந்தை பேரச் சொல்லுடா பேரா.
@@@@
'ஆவ்யான்' (Aavyan).
@@@@@@
'ஆவியான்'னா. என்ன அநியாயம்டா. பெத்த கொழந்தைக்கு ஆவின்னெல்லாம் பேரு வைக்கிறதா?
@@@@@
ஆவ்யான் அர்த்தமில்லாத பேரு. இப்ப எல்லாம் அர்த்தமில்லாத பேரை வச்சிருக்கிறதுதான் நாகரிகம். என் மனைவிக்கு அடுத்த மாசம் கொழந்தை பொறக்கப் போகுது. ஆண் குழந்தை பொறந்தா 'ஆவ்யான்'. பெண் குழந்தை பொறந்தா 'ஆவ்யா'. நீங்க என்ன சொல்லறீங்க பாட்டி.
@@@@@@@
நம்ம கெராமத்தில தமிழ்ப் பேரு உள்ள பசங்க பொண்ணுங்க யாருமே இல்லடா கிச்சோறு (Kishore).
@@@@@@
உங்க பேரு கமலா. அந்தப் பேரே தமிழ்ப் பேரு இல்ல.
@@@@@@
என்னடா கிச்சோறு சொல்லற?
@@@@@
அது இந்திப் பேரு பாட்டி. 'கமலா' -ன்னா 'தாமரை'ன்னு அர்த்தம்..தாத்தா பேரு பிரகாசம். அதும் 'பிரகாஷ்'ங்கற இந்திப் பேரோட தமிழாக்கம். இனிமே தமிழ் நாட்டில யாரும் கொழந்தைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கமாட்டாங்க. தமிழ்ப் பேரை வைக்கிறதைக் கேவலமா நெனைக்கிற நெலையில தமிழ் மக்கள் இருக்கிறாங்க பாட்டிம்மா.
@@@@@@
ஆமாம்டா கிச்சோறு. நான் பொறக்குறதுக்கு முன்னாடியே நம்ம மக்கள் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதுக்கு முழுக்கு போட்டுடாங்கடா.
@@@@@@
அப்பவே தமிழர்கள் தன்மானத்தையும் தாய்மொழிப் பற்றையும் இழந்துட்டாங்க. தமிழர்கள் சீரழியறதே சினமா தொலைக்காட்சி தொடர்களப் பாத்துத்தான்.
@@@@@
நீ சொல்லறது உண்மைதான்டா கிச்சோறு.

எழுதியவர் : மலர் (17-Feb-20, 6:29 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 87

மேலே