கேட்கிறாயா என் காதல் கதையை 💚💙

4 - ஆம் ஆண்டில் சந்தித்தோம் , கண்களால் காதலை பேசிக்கொண்டோம். வாய்விட்டு கூறாவிட்டாலும் எங்களை சுற்றியுள்ளவர்களுக்கே தெரியும் நான் யார் அவன் யார் என்று ! 3 வருடம் ஓடியது, பள்ளி கடைசி நாள் வருமுன் , நான் வேறொரு பள்ளிக்குச் சென்றுவிடுவேனென அவன் முகத்தில் பயம்தெரிந்தது. பாடமுடிந்தபின் , என்னிடம் " நீ வேறொரு பள்ளிக்குச் சென்றுவிடுவாயா ?" என்று அவன் கேட்ட போது தெரியவில்லை நான் அவனை விட்டு வெகுதொலைவில் இருப்பேன் என்று. மிகவும் அலட்சியமாக ஆமாம் என்று சொல்லிவிட்டேன் . பள்ளி கடைசி நாளும் வந்தது, பிரிந்துவிடுவோம் என்ற பயமில்லாமல் விளையாடிக்கொண்டிருதேன், பள்ளிமுடித்ததும் என்னிடம் "பாய் " "பாய் " "பாய் " என்று அவன் தொடர்ந்து கூறியபோதும் தெரியவில்லை பிரிந்துவிடுவோமென்று! வகுப்பைவிட்டு வெளியேறியபோது திடீரென அவன் என் கண்முன் தோன்றினான் , இந்த நிமிடம் நான் கண்முடினாலும் அவனின் அந்த முகம் என் கண்முன் நிற்கும். கண்ணும் கண்ணும் பார்த்துக்கொள்ள அவன் கூறியது அந்த 3 வார்த்தை "I LOVE YOU " நான் இன்று உன்னக்கு "Call " பண்ணுவேனென்று , திகைத்துப்போய் நின்றேன் , விளையாடுகிறான் என்று நினைத்து அவன் தோழன் கொடுத்த அவன் அம்மாவின் கைத்தொலைபேசி எண்ணை மனனம் செய்துகொண்டு வீடு திரும்பினேன். அன்று இரவு , லீனா உனக்கு "Phone " என்று அம்மா கூற, யாரா இருக்கும் என்று பதறி கீழே ஓடினேன் ! ''Hello " என்று அவனின் குரல்................


மீண்டும் தொடரும் ............💚💙

எழுதியவர் : லினா தர்ஷன (19-Feb-20, 9:10 am)
சேர்த்தது :
பார்வை : 299

மேலே