மீண்ட சுவர்க்கம்
சிற்றூடலில் ஏனோ நீ என்னை விட்டு
பிரிந்திருந்தாய்.... காத்திருந்தேன் பயனில்லை
நீயோ வாராதிருந்தாய் ... பிரிவு வலி தந்தது
பிரிவில் அன்றிலானேன் நான் என்னையே
மாய்த்துக்கொள்ள நினைத்து.... அந்நினைவு
அவனை வாட்டியதோ தெரியாது என்பின்னே
என்னைக் கட்டி அணைத்தான் ஆண் அன்றிலாய்
அவன் ஊடல் மறந்து..... தனித்திருந்த அன்றில் நான்
இன்று பிழைத்தேன் அன்றிலாய்