அவள் விழிக்குளத்தில்

அவள் விழிக்குளத்தில்....
அவள் விழிக்குளத்தில்....
விளையாடும் என்னாசை மீன்கள்
அவள் உதட்டூரில்
பயணிக்கும் வார்த்தைகள்
என் ஆயுள் கூட்டும் வரங்கள்!

அவளின் சின்ன சின்ன சிணுங்கல்கள்
என் காதுக்கினிய கீதங்கள்
ஊமை மொழி பேசியே உள்ளம் திருடிவிட்டால்
ஊனமான உசுரை மெல்ல வருடிவிட்டால் !

முணுமுணுக்கும் அவள் பெயரை
முப்போதும் என் உதடு
முப்பாலும் கொடுக்கும் அவள்
எனக்கென்றும் தமிழேடு!

அவள் மை பூசா கண்களில்
கண்டேன் மயக்கும் போதை
அவள் கை பேசும் நளினங்களில்
இழந்தேன் என் மனதை
கனல் பார்வை காட்டினாள் தத்தை
சுட்டு சுவைத்தாள் என்னிதயத்தை !
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (20-Feb-20, 3:30 pm)
பார்வை : 330

மேலே