கண்ணனாய் இல்லை காதலனாய் உதவ

கருமேக ஆடை உடுத்திய நிலவை

துச்சாதன காற்று துகில் உரித்ததோ

பளிச்சென்று நிற்கும் ஆடையில்லா முழுநிலவு

ஆடைகேட்டு தவிக்கிறதே

என் கண்களுக்குள் விழுந்தபின்னே

கண்ணனாய் இல்லை காதலனாய் உதவ மனசு துடிக்கிறதே

எழுதியவர் : நா.சேகர் (21-Feb-20, 7:57 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 906

மேலே