தமிழில் வேதம்
இறைவா உனது வாக்கை வடமொழியில் வேதமாய்
உரைத்தாய் தென்னவர் நாங்களும் சற்றே
இறைமை புரிந்துக்கொள்ள எம்மொழி தமிழில்
வேதமிதைத் தந்தருள மாட்டாயோ என்று கேட்டாரோ
வேதமாய் உருவெடுத்து குருகூர் நம்மாழவான்
திருவாய்மொழி தந்தருளினானே வேதமாய்