மரம் நடுவாய்

மரங்களை வெட்டி யழித்துவிட்டு
மாடிகள் கட்டும் மனிதாகேள்,
இருப்பது சிலநாள் இவ்வுலகில்
இதற்குள் இயற்கையை அழிப்பதேனோ,
மரங்களால் தானே மழைவந்தே
மன்னுயி ரெல்லாம் பிழைத்திருக்கும்,
கருத்தினி லிதனைக் கொண்டேதான்
காசினி வாழவை மரம்நட்டே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Feb-20, 7:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maram natuvaai
பார்வை : 38

மேலே