தாக்கத்தின் ஏக்கம்

உன் விழிகளில் எழும் மொழிகளில்
மலருமே புது கவிதைகளே
அளந்திடும் இரு கருவியாய்
கோர்க்குமே நம் கரங்களே
காலங்கள் நகரும் வேகத்தில்
வளருமே நம் உறவே
அளவிலா உணர்வுக்கு
யாதெனில் இரு மனமே
தடுக்கிடும் சில தடைகளாய்
மாறுமே சில உறவே
திடுக்கிடும் ஒரு திருப்பமாய்
வருவாயே என் வரமே
திகட்டிடும் புது காதலை
பொழிவாயே என் வைரமே .

- உன் தாக்கத்தின்
ஏக்கத்தில் நான்

எழுதியவர் : நிழலின் ஓவியம் (27-Feb-20, 9:32 am)
சேர்த்தது : கண்ணம்மா
பார்வை : 97

மேலே