எங்கும் அன்பு உண்டு

எங்கும் அன்பு உண்டு
வறண்ட காடுகளில்
நிறைந்து காணப்பட்ட
சப்பாத்தி கள்ளி
பார்ப்பதற்கு முள்ளாய்
காணப்பட்டாலும் !.
அதன் மேல் பூத்திருந்த
பூக்கள் எடுத்து சொல்லியது
எங்களுக்கும் அழகு உண்டு

குட்டியுடன் இருந்த
குரங்கை அடித்து
கொன்ற புலி
குட்டியை கண்டவுடன்
கண்களில் காட்டிய அதிர்ச்சி
அவைகளுக்கும் ஈரம் உண்டு

ஒற்றையாய் வளர்ந்து
விட்ட கொடி ஒன்று
அடிக்கும் காற்றுக்கு
தத்தளித்து தடுமாற !
ப்க்கத்து மரமொன்றின்
கிளை ஒன்று வளைந்து
கொடுத்து நின்றது
கொடி
பற்றிக்கொள்ள !
நடுக்கடலில் விழுந்து
விட்ட உயிர்களை
கூட
கரையோரமாய்
தள்ளி விட்டு காப்பாற்ற
துடிக்கும் கடல் !

கரையோரமாய்
மீனுக்காக
காத்திருந்த கொக்கு
தவறி தரைக்கு
வந்த மீனை
கவ்வி ஆற்றில் விட்ட
அழகு !

சுற்றிலும் பாலைவனமாய்
இருக்க !
ஒற்றை மரம் ஒன்று
தன்னை விரித்து
நிழல் தர காத்திருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Feb-20, 10:19 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : enkum anbu undu
பார்வை : 168

சிறந்த கவிதைகள்

மேலே