அணியும் உடையில் அடக்கம்
பெண்ணே நீ அணியும் ......
அணியும் உடையில் பகட்டேதும் இல்லாது
அடக்கம் இருப்பின் இளமையின் எழிலும்
இலைமறைவாய் காய்மறைவாய் மேகத்தில் மெல்ல
ஊர்ந்து செல்லும் நிலவொப்ப எழில் வீசும்
பார்ப்போரும் கண்டு மகிழ்வர் ஒருபோதும்
மேற்பார்வை மாறாது என்றும்