வாழ்வை ரசிக்க முடியுமா

ஆழம் போனவுடன்
அறிவும் தெளிந்தது!
ஈரம் ஆனவுடன்
இதயம் கணத்தது!

தூரம் போனவுடன்
தனிமை புரிந்தது!
பாரம் கொண்டவுடன்
பழகத் தெரிந்தது!

வந்து போனதும்
வாழ்வை உணர்கிறேன்
வாழ வருபவர்
கணக்கில் வைக்கிறேன்.

கடந்து போவதே
நிலையென உணர்ந்ததும்
கடக்கப் போவதை
நினைத்து அழுவதா??

கொஞ்சம் சிரித்ததை
பிழையென கருதினால்
போகும் நாள்களும்
இடரென ஆவதா?

என்னை எண்ணியே
நான் நகர்ந்துபோகிறேன்
என்ன என்னவோ
அதில் கடந்து போகிறேன்.

எழுதியவர் : இஜாஸ் (7-Mar-20, 12:32 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 299

மேலே