பெண் மனம்

உன்னை குறித்து
கவிதை எழுத
நினைத்தேன் ;
ஒரு சொல்
கவிதையாக
வடித்திட நினைத்து ;
எங்கு செல்வேன்
உனக்கான ஒரு
சொல் தேடி....
சொற்களும் தான்
வஞ்சம் செய்ததே ,
எதனிலும் அடங்காத
பெரும் கவிதையோ ;
நீ...ர் !...... நீர் ஊற்றின்
உருவாகும் வெள்ளத்தின்
பிராவாகமோ நீ !.......?

ஓ.... பின்பு தான்
அறிந்தேன் உன்னை ;
ஆழ் கடலின் அமைதி
கொண்ட , பெண் மனம்
அன்றோ நீ .....என்றும் 
கவிதைகளில்
முற்று பெறாத
புரியாத புதிர்
தானே பெண் மனம் !.....
💐💐🌹💁🌹💐💐

எழுதியவர் : Veenu (11-Mar-20, 6:58 am)
சேர்த்தது : Piyu
Tanglish : pen manam
பார்வை : 123

மேலே