வேங்கையின் மகள்

சிகரம் நோக்கி சீறி எழுந்திடு
சிறந்த உன் நெறியில் ஐயம் கலைந்திடு
நெருப்பதன் வேகம் நெஞ்சில் நிறைத்திடு
நெருங்கிடும் வெற்றி நெற்றித்திலகமாய்
பிறப்பதன் அற்புதம் பெற்ற எழில் மங்கையுன்
பிறந்த அந்நாள் முதல் சீருடன் சிறப்புடன்
தனித்துவம் தாக்கி தரணியில் தழைக்கவே
தருவாய் அருள் மழை இணையிலா இறைவனே

எழுதியவர் : நசீர் (25-Mar-20, 6:43 am)
சேர்த்தது : Nasir Ahamed
பார்வை : 699

மேலே