அவள் மா நான்
சித்திரையில் தவறாது
மரமெல்லாம் இலையே
இல்லாததுபோல் பூவும்
பிஞ்சுமாய் காட்சி தரும்
மாமரமே உன்னை நான்
என் சிறு வயது முதல்
கண்டு மகிழ்கின்றேன்
அன்று நான் சிறுவனாய்
உன்னைப் பார்த்தபோது
இதே பொங்கும் இளமையில் .....
இன்று நான் ஓர் காதலன்
இதோ உன்னைப் பார்க்கின்றேன்
கொஞ்சமும் மாற அதே இளமையில் நீ ....
கொஞ்சம் நீ சொல்லி தரமாட்டாயோ மாமரமே
என் காதலிக்கு உன் இளமையின்
ரகசியத்தை ......