தடுக்காதே அழவிடு
அனைத்துக்கும் ஆதாரமானவனே
ஆதவனே மூத்தவனே
முதலில் எழுந்து, முகம் காட்டி
மக்களுக்கு வழிகாட்டும்
மரியாதைக்குரிய மகராசனே !
கோபம் கொண்டவனைப்போல்
கோடையில் கடுமையாய் சூடேற்றாதே
கைகூப்பி வணங்குகிறோம்
குடிக்க நீரில்லை, இருக்க வீடில்லை
எங்கே போவோம், சொல்லு
எங்களின் துயர் கண்டு
மேகக் கூட்டங்கள் கூட வானில்
துவண்டு நிற்கின்றன
தடுக்காதே, அழவிடு
கருணை காட்டு, கலைத்து விடாதே !