காதல் காவியம்

உன் கண்களை காணாமல் எனக்குள் கவிதைகள் காய்ந்துவிட்டன..
வரிகள் எல்லாம் வாடிவிட்டன..
நயங்கள் எல்லாம் நலிந்து விட்டன...
எழுத்துக்களெல்லாம் இயற்கை எழுதி விட்டன..
கவிதையின் கருக்கள் கலைந்து விட்டன..
என் சொற்களெல்லாம் சொல்லி விட்டன..
உன் கண்ணைக் காண உன்னிடம் தள்ளி விட்டன..
வார்த்தைகள் என்னை வாழ்த்தி விட்டன..
வாக்கியம் எழுத உன்னிடம்
சேர்த்து விட்டன..
காதலிக்க உன் கண்களை நான் கேட்கவில்லை..
காவியம் படைக்க கேட்கிறேன் ..
ஆமாம்,
காதல் காவியம் படைக்க பார்க்கிறேன்..
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (4-Apr-20, 12:09 am)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : kaadhal kaaviyam
பார்வை : 288

மேலே