ரோசாப் பூ

ரோசா ......
பூவில் ஓர் ராணி
எத்தனையோ வண்ணங்களில்
பார்க்க பார்க்க பரவசம் தரும்
உன்னதப்பூ மணம் தரும் பூ
என்றும் காதலர் மனதை
சேர்த்திடும் பூ
பச்சை இலைகள் நடுவில்
பூத்து சொக்க வைக்கும்
சிவப்பு ரோசாப்பூ
கண்ணுக்கு என்றும் நேர்த்தி
இதன் மெல்லிய கிளைகளில்
முள்ளும் வைத்து படைத்ததேனோ
இயற்கை ....... அழகுக்கோர் பாது காப்பு ?
பூவின் மது அருந்த வரும்
முரட்டு வண்டுகளிலிருந்து ......?

பெண்ணும்' அழகிய பெண்ணும்
ரோசா பூப்போல
அழகு ரசிப்பதற்கு
ரசிப்பதில் தவறில்லை
அழிக்க நினைப்பது வன்மம்
எண்ணணத்தில் ஒழுக்கம்
உடலுக்கு அடக்கம் தரும்


' a thing of beauty is joy for ever' '

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Apr-20, 9:53 am)
பார்வை : 66

மேலே