யாரவள்

யார் அவள்....
வார்த்தைகளுக்குள் மட்டுப்படாதவள்...
வாள் வீசியும் கட்டுப்படாதவள்..
கிரகங்களில் கூட கிரகிக்க இயலாதவள்..
கீழடியில் தோண்டியும் கிடைக்கப் பெறாதவள்..
ஒளிகளில் ஒளிந்திருந்தும் ஒளிப்பரப்பாதவள்..
எதிரொலியாய் உருபெற்றும்
ஒலி மீளாதவள்...
யாரவள்...
தீக்குழம்பிலும் நொதிக்காதவள்
தீக்குச்சியிலும் கொதிக்காதவள்..
துரத்தி சென்றும் தொட்டுவிட தோணாதவள்..
விரக்தி விரைந்தெழுந்தும் விருப்பம் விளகாதவள்..
வாடிநின்ற வாலிபனுக்கும் வாழ்க்கை வார்க்காதவள்..
வசியம் வைத்துப்பார்த்தும் வசமா மாட்டாதவள்..
கன்னி மகனை கவர்ந்திழுத்தும் கற்பிழக்காதவள்..
கண்மையில் கூட கவி மையை பூச மறக்காதவள்..
யாரவள்...
அவள் யாரவள்...
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (6-Apr-20, 8:17 am)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 199

மேலே