பிறந்தநாள் பரிசு

என்னை விதையிட்ட,பெற்றோர்க்கும்...
எனக்கு நீர் ஊட்டிய,ஆசானுக்கும்...
சாயும் வேளையில்,
சட்டென்று காக்கும்,
மண்போல உள்ள,என் தன்னம்பிக்கைக்கும்...
என் வளர்ச்சியில்,
பங்கு தாரராக,
இருக்கும் உறவுகளுக்கும்...
என் மார்புக்குள்,
இருக்கும் வேரான,நண்பர்களுக்கும்...
என்னை,இத்தனை ஆண்டுகளாக,
வழி நடத்திய,அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!

எழுதியவர் : கதா (13-Apr-20, 4:37 am)
சேர்த்தது : கதா
Tanglish : piranthanaal parisu
பார்வை : 71

மேலே