காதல் சொல்ல வந்தேன்

வாயாடியான நான்
வாயடைத்து நின்றேன்
என்நிழல் அவன்நிழழ் தீண்டும் தூரத்தில் !!

ஆயிரமாயிரம் கவிபாடி
அதற்கேற்ற நடமாடிய
அவன் விழிவெளிச்சம் கண்டு
வெட்கத்தில் சற்றே குனிந்தேன் !!

ரோஜா இதழ்களின் மகரந்தமா
தேன்குடிக்க வந்த தேனீக்களா
செம்புற்றுப்பழங்களின் விதைகளா
என்னென்றுசொல்வேன் அவனிதழ் மச்சங்களை!

என்மனம் பாடிய கவியொன்றும்
அவன் செவியில் விழவில்லை

அவன் கள்ளப்புன்னகை கண்டதுமே !!
தலை சுற்றி மூச்சிறைக்க
உணர்வுகள் உயிரிழக்க
செவிகள் செயலிழக்க
கால்கள் வலுவிழக்க
மயங்கி விழுந்தேன் அவன்மடியில்!!

எழுந்ததுந்தான் உணர்தேன்
என்காதல் சொல்ல
கனவிலே
ஒத்திகைதான் பார்த்தேனென்று!!

எழுதியவர் : கோப்பெருந்தேவி (15-Apr-20, 4:12 am)
சேர்த்தது : கோப்பெருந்தேவி
பார்வை : 288

மேலே