என்னவளே..ஏன்
அன்று
படிக்கும் போது
பள்ளியறையில்
என்னை காத்திருக்க வைத்த நீ..!
காதலிக்கும் போது
கடற்கரையில்
என்னை காத்திருக்க வைத்த நீ...!
கல்யாணத்தின் போது
மணவறையில்
என்னை காத்திருக்க வைத்த நீ...!
முதலிரவின் போது
தனியறையில்
என்னை காத்திருக்க வைத்த நீ...!
வாழும் போது
படுக்கையறையில்
என்னை காத்திருக்க வைத்த நீ...!
காலம் முடிந்த போது
கல்லறையில்
என்னை காத்திருக்க வைக்காமல்
நீ உடனே வந்தது ஏன்...?
கவிதை ரசிகன்