நாளை உனதாகலாம்

புழுதியில் விழுந்த மலர்
விழுந்த பின்னும் புன்னகை புரிகிறது
புழுதியில் மண்ணில் குப்புற விழுந்த மனிதன்
தண்ணி அடிக்கிறான் தற்கொலை செய்கிறான்
மலருக்கு வாழ்க்கை ஒரு பொழுது
மனிதா உனது வாழ்க்கைக்கு எத்தனையோ பொழுதுகள்
வாசலில் காத்திருக்கின்றன
துவண்டு விழுந்து கிடந்தால் துன்பங்கள் ஓடுவதில்லை
தோளுயர்த்தி எழுந்து எதிர்த்துச் செல்
நாளை உனதாகலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-20, 10:30 am)
பார்வை : 98

மேலே