சமுதாயம்
மனிதர்களில் ஒருவனாம்
மகத்தான கடவுளாம் - மருத்துவர்
தன்னலம் சிறிதுமின்றி
தன் உயிர் என்ற உணர்வுமின்றி
காலை மாலை என்ற நினைவுமின்றி
காப்பாற்ற வந்தானடி..
கலகம் சிறிதுமின்றி
கல்லறைக்கு அனுப்பினாயே
நல்லறம் சிறிதுமின்றி
நல்லடக்கம் செய்ய மறுத்தாயே
மனிதா போதுமடா உன் வேசம்
மனிதநேயமடா அவன் சுவாசம்