புது மண ஜோடியைப் பிரித்துவைத்த கொரோனா

நீ எங்கே ........ நீ எங்கே
என் நினைவுகள் அங்கே
என்னை விட்டு உன் தாய் வீடு
சென்றாயே ஏனோ அதுவும்
விதிசெய்த சதி தானோ கண்ணே
இப்படி மணம் முடிந்து மாதம்
ஒன்று கூட ஆகாதிருக்க
தேன் நிலவும் கூடி வரல
இதோ நாளையே திரும்புவேன்
என்று போனவளே என் இனியவளே
நீ திரும்புமுன்னே இந்த பாழும்
கொரோனா வந்து உன்னை அங்கே
என்னை இங்கே என்று வைத்து
கொக்கரிக்கிறதே ...என் செய்வேன் நான்
காலமே நீ மாறுவது எப்போது
இந்த கொரோனா நாட்டை விட்டு ஓடுவது எப்போது
பிரிந்த புதுமண ஜோடிகள் நாங்கள் சேருவது எப்போது
தேன் நிலவில் கூடுவதும் எப்போது
தெரியலையே ...... கண்மணியே உன்
பிரிவில் நித்தம் நித்தம் வாடும் நான் இங்கே
நான் அறிவேன் உன் மனமும் இப்படித்தான்
எனக்காக ஏங்கி அலையும் என்றங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-May-20, 11:11 am)
பார்வை : 56

மேலே