கதைப்போமா

பவ்யமான மாலை நேரம்..
யாருமில்லா மாடி ஓரம்..
காதலோடு அவளும் நானும்..
மனம் திறந்து
கதைத்துக் கொண்டிருந்தோம்..
வருத்து எடுக்கும் வெயிலுக்கு
மழை பொழிய வேண்டும் என்றேன்!
கள்ளி அவள் சட்டென்று
என் சட்டையை பிடித்து இழுத்து
இறுக்கக் கட்டிக் கொண்டு..
என் இதழை
ஈர முத்தத்தினால் நனைத்துவிட்டு
நாணத்துடன் சொல்கிறாள்
இது வெறும் சாரல்மழை தான்😉
இரவில் அடைமழை பெய்ய
அதிகம் வாய்ப்பிருக்கிறது
தயாராய் இருந்து கொள் என்று😜
என் காட்டுச்சிறுக்கி!!!😍

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:15 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 590

மேலே