63 நைந்த எல்லார்க்கும் தெய்வமறையின் சிறப்பைக் கூறுபவன் ஆசான் - ஞானாசிரியன் பெருமை 10
கலித்துறை
வைவார்தமை வாழ்த்தியு நெஞ்சில் வருத்த முற்று
நைவாருடன் நைந்தழு துந்தமை நண்ணித் துன்பஞ்
செய்வாருறு பீழை நினைத்துஞ் சிந்தை நொந்து
மெய்மாமறை யின்பய னோதுவர் மேன்மை யோரே. 10
- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மெய்யுணர்ந்தவர் தம்மைத் திட்டுபவரை வாழ்த்தியும், உளம் வருந்தித் துன்புறுபவர்களுடன் தாமும் துன்புற்று அழுதும், தம்மை நெருங்கித் துன்பம் செய்வார்க்கு அத்தீவினைப் பயனால் துன்பம் வருமே என்று மனம் நொந்து எல்லார்க்கும் உண்மைத் தெய்வமறையின் சிறப்பை எடுத்துக் கூறுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
நைவார் - துன்புறுவார். பீழை - துன்பம். மேன்மையோர் - மெய்யுணர்ந்தார்.