ஏழையின் சூளுரை
கடல் அலையாய் எனை அடிக்க
கரைந்து விடும் கரைமணலென
கணித்தாயோ எங்களையே....
காட்டாற்றில் கரை கடக்கும்
கட்டுமரம் நாங்களடா....
காற்றற்று ஆனாலும்
கட்டவிழ்த்து போனாலும்
உணர்விழந்து நின்றாலும் - எம்
உதிரமது உறைந்தாலும் - உம்
பண வர்க்க அலையினாலே - எம்
பசி வயிற்றில் அடித்தாலும் - உம்
தாளை வணங்கி நின்ற போதும் எமை
ஏழை என்று அறைந்தாலும் - எம்
கரமதனை துடுப்பாக்கி
உரமாய் எமை உரித்தாக்கி...
உதைத்தெழுவேன் உனையே - எம்
தோணியெனும் ஏணியிலே - நல்
தோன்றலாவேன் இப் பாணியிலே
பசி என்னும் பிணியதுவும்
திசையிழக்கும் அந்நாளினிலே
பண வர்க்க கொடுமையதும்
பறந்து போகும் இப் பாரினிலே .....