விடுதலை களம்

கொடுங்கோல் ஆதவனும்
கண்ணீர் சிந்தினான்
இரத்தத்தில் மிதந்த
ஈழத் தமிழினத்திற்காக

வீரம் கொண்டெழ
பதுங்கிடந்த புலிகள்
செந்நாய்கள் ௯ட்டத்தில்
வஞ்சகத்தில் வீழ்ந்தது

போா்களமா அது?
சிங்களத்தின் வேட்டைகளமா?
விதிகள் உண்டோ?
சதிகள் உண்டோ?

பெண்மையினை இழந்தும்
ஆண்மையினை இழந்தும்
உணர்வையும் இழந்தும்
உரிமையும் இழந்தோம்!

கதறும் தமிழினம்
அலறும் பறவையினம்
கசிந்தது கண்ணீா்
பெருகியது இரத்த வெள்ளம்!

துண்டிக்கப்பட்ட தலைகள்
மண்ணில் விதைக்கப்பட்டது
ஓா்நாள் உயா்ந்தெழும்!
விடுதலைக்களம் காண!!

எழுதியவர் : வினோ பாரதி (18-May-20, 10:47 am)
சேர்த்தது : வினோ பாரதி
பார்வை : 228

மேலே