மலைத்துளி
பச்சைப் போர்வைக்குள்...
கண்கள் மூடிக் கிடக்கிறது
வண்ணவண்ண பரப்பு..!
இச்சை கொள்ள...
நெஞ்சம் துடிக்கிறது
என்னஎன்ன நினைப்பு..!
உச்சி மலையில்...
அருவி கொட்டுகிறது
காணக்காண வனப்பு..!
மிச்சம் எல்லாம்...
மேனியில் விழுகிறது
உள்ளமெல்லாம் களிப்பு..!!