பஞ்சணை சொர்க்கம்

விடும் மூச்சுக்கும்
ஆயுள் குறைகின்றது/
துடிக்கும் இதயமும்
மடிந்திடும் நிலையில் /

ஓடும் குருதியும்
ஓய்வு கேட்கின்றது/
ஆசையெல்லாம் அமைதி
அடைந்த நிலையில்/

மோகமும் முற்றாகக்
கரைந்து செல்கின்றது/
இங்கு வந்து நீ
உணர்ச்சியைக் கொட்டினால்/
உமக்கு மகிழ்ச்சி கிடைத்திடுமோ?

நோய் தின்று
கொண்டு இருக்கும் உடல்/
போகத் தாயாராகி விட்ட உயிர்/
வாடிய வாறே நகரும் வாழ்வு/
இந்நேரத்தில் நீ நுழைந்திட நினைத்தால்/
என் மனம் கதவு திறந்திடுமோ?

பாய் விரித்தால் உடன் உறக்கம்/
மறு நாள் எழுந்து விட்டேன் என்னும்/ எண்ணத்தை ஏற்றுக்கவே தயக்கம்/

ஒவ்வொரு நொடியும் மரண ஒலியே/
எனது காதுகளில் கேட்ட படியே/
இவ்வேளையில் வந்து நீ பக்கம்
உறங்கிட இடம் கேட்டால் /
உனக்குக் கிடைத்திடுமோ ?பஞ்சணை சொர்க்கம்/



(ஓவியருக்கு வாழ்த்துகள்)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-May-20, 1:33 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 116

மேலே