அரண் இல்லா எதுவும்

கிரீட நோயின் உயிர் கிறுகிறுப்பால்
சுறு சுறுப்பாய் வசூலிப்பில் அரசாங்கம்
கோட்டம் விட்டு கோட்டத்திற்கு ஒரே பேருந்திற்கு
நீட்டமாய் சென்றுவர அரசால் தடை விதிப்பு
ஒரு மணி நேர பயண நேரம் அதனால் இரண்டாய்
முப்பது ரூபாய் கட்டணம் ஐம்பது ரூபாயாய்
சமூக இடைவெளி பேருந்தில் சவலை பிள்ளையாய்
முகத்தோடு முகம்பதித்து முத்தம் கொடுத்தே பயணம்
முகக் கவசத்துணியும் முகவாய் கட்டையோடே
ஆபத்தை அறியாமல் அனைவரும் ஆராவரத்தோடே
அரண் இல்லா எதுவும் அடியோடே அழியும்
கிரீட நோயோ அல்லது கீழ்படியாத மக்களோ முடிவில்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Jun-20, 4:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 65

மேலே