இதமான காதல் கவிதை

💝💜💝💜💝💜💜💝💜💝💜

*கவிதை*

படைப்பு; *கவிதை ரசிகன்*

💝💜💝💜💝💜💝💜💝💜💝

என்னவளே!
👁️‍🗨️கண்களை திறந்தால்
காட்சியாய் தெரிகிறாய்
கண்களை மூடினால்
கனவாய் வருகிறாய்....

பாடலைக் கேட்டால்
🎶இசையாய் ஒலிக்கிறாய்...
🌧️மழையைய் ரசித்தால்
துளியாய் 💧 தெரிகிறாய்...

தனிமையில் இருந்தால்
நினைவாய் வருகிறாய்...
தண்ணீரில் குளித்தால்
பிம்பமாய் தெரிகிறாய்....

🌺பூக்களைப் பார்த்தால்
புன்னகை செய்கிறாய்...
🍎கனியை சுவைத்தால்
இனிப்பாய் இருக்கிறாய்....

சிந்தனை செய்தால்
கவிதையாய் வருகிறாய்....
சீராகக் கிறுக்கினால்
👩‍🦰சித்திரமாய் தெரிகிறாய்...

நீ இல்லாமல்
இவ்வுலகில் ஏதுமில்லை..
நீ இல்லையென்றால்
இவ்வுலகமே எனக்கில்லை....

*கவிதை ரசிகன்*


💝💜💝💜💝💜💝💜💝💜💝

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Jul-20, 8:50 pm)
பார்வை : 159

மேலே