பெருமை
உன் விஞ்ஞானத்தை வியந்து விண்மீன்கள் கண்சிமிட்டுமா!?
உன் கல்வியைக் காற்று கற்றுக்கொள்ளுமா?
உன் சினத்தில் சூரியன் சிவப்பாகுமா?
நீ பறப்பதைக் கண்டு பறவைகள் புழுக்கம் கொள்ளுமா!?
உன் இல்லத்தின் எழிலில் தூக்கணாங்குருவி ஏக்கம் அடையுமா?!
மொத்தத்தில் உன் பெருமைக்கு எருமை கூட பொறாமைப் படப் போவதில்லை!!!