மனசாட்சி
மெல்ல நீ பேசுவாய்
மௌனத்தில் நான் இருப்பேன்
கவலைகள் உன்னிடம் நான் சொல்ல
காதோரம் நீ பேசுவாய்
மகிழ்ச்சியின் முதல் ரசிகை
நீ தான்
அதில் நான் நிலைத்திருக்க
செய்பவளும் நீ தான்...
தோழி போல் உடன் வருவாய்
உன் வருகை இன்றி
நான் சென்றதில்லை எங்கும்..
பல விடயங்கள் உன்னிடம் மட்டும்
பதில் நமக்குள் மட்டும்
பல விஷயங்கள் நீ அறிவாய்
பாலம் போல் நீ இருந்தாய்...
நீ எந்தன் மனசுக்குள்
மனசாட்சியே!
- முத்து துரை சூர்யா