எந்நிமிடமும் காத்திருப்பேன் உனக்காக 555

ப்ரியமானவளே...


நீயும் நானும் சேர்ந்து
இருந்த போது...

என்னுடைய சிறுசிறு
தவறுகளை கூட...

நீ நிறைவாக
எடுத்து
கொண்டாய்...

அதே நிறைகளை
இன்று
பிரிவதற்காக...

காரணம் சொல்கிறாய்
அடுக்கடுக்காய்...

சேர்வதற்காக நான் காரணம்
தேடிக்கொண்டு இருக்கிறேன் உன்னிடம்...

எதாவது ஒரு நிறைகள்
உனக்கு
பிடித்திருக்காதா என்று...

என்னை நீ பிரிந்து செல்வது
நிரந்தரம் என்றால்...

உனக்காக இனி நான்
சிந்தும்
கண்ணீர் துளிகளும்...

நிரந்தரம் தான்
உன்னை நினைத்து...

என் நினைவு உனக்கு வந்தால்
என்னை வந்து சேர்ந்துவிடு...

எந்நிமிடமும்
காத்திருப்பேன் உனக்காக.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Jul-20, 9:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 797

மேலே