நதி மனசு
=========
மலை உச்சியிலிருந்து
ஆக்ரோசமாய் வீழும் நதி
தன் பள்ளத்தாக்குக் கரைகளை
நோக்கி விரைகின்ற
வண்டிகளைப் பார்த்துப் பயந்து
மறுபடியும் மலையுச்சிக்கே
போய்விடலாம் என்று எடுத்தமுடிவை
மாற்றிக்கொண்டு ஓடத்தொடங்குகிறது
மணல் கொள்ளைக்காரனுக்கும்
படியளக்க வேண்டுமென்று
**
மெய்யன் நடராஜ்