காதல் என்றும் சுகமே

அந்தி கருக்கலில்
ஒத்தயடி பாதையில்
உன்னுடன் கைகோர்த்து
நடக்கையில்...! !

பதினாறு வயதின்
வாலிப குறும்புகளை
எல்லை மீறாமல்
செய்து மகிழ்ந்த
அந்த நாட்களை...! !

ஆயிரம் பிறைகள்
கடந்த பின்பும்
பசுமையாக நினைவில்
நிலைத்து நிற்க...
அந்த நினைவுகளை
ரசித்து மகிழ்வது...! !

ஆஹா..ஆஹா...
என்ன சுகம்...என்ன சுகம்...
காதல் மயக்கம்
தந்த அந்த சுகம்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Aug-20, 7:55 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 271

மேலே