பார்வையின் வினோத பரிவர்த்தனைகள்
அடியே என் காதலியே நீயறியாயோ
                                                                            உந்தன் கண்கள் புரியும் ஜகத்ஜாலத்தை  
                                                                            உன் விழிகளின்  பார்வையைவிட்டு பிரிய
                                                                            மனமிலா என் விழிகள் இதை எனக்கு சொல்லுதடி
                                                                            'விழியியல்; என்றே ஒரு வார்த்தையில் அடங்கும்
                                                                             உந்தன் அற்புதப் பார்வை.....
                                                                            நீயோ ஒன்றும் அறியாதவள்போல் என்னையே 
                                                                            மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க................. 
                                                                            அதற்கவள் சொன்னாள், ;' அன்பே நீ 
                                                                            அறியாயோ உந்தன் புன்னகைத்தான் என் 
                                                                            மனத்தைக் கட்டிபோட்டுவிட  செயலிழந்து 
                                                                            மௌனமாய் உன்னையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்....
                                                                            நீ சொல்கிறாய் நீ என்னையே என் விழிகளையே 
                                                                           பார்த்துக்கொண்டிருப்பதாய்...  
                                                                              பார்வையில் , காதலர் பார்வையில் இப்படியும்
                                                                              சில வினோத பரிவர்த்தனைகள்..................

